இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தரான சுனில் கலகம அவர்கள், சர்வ மதங்களின் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டதன் பின்னர், இன்று (10) பிற்பகல் பதுளை மாவட்ட செயலகத்தில் பதுளை மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபராக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
2000 ஆம் ஆண்டில் இலங்கை நிர்வாக சேவையில் இணைந்த சுனில் கலகம அவர்கள், வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் உதவி பணிப்பாளராக தனது கடமையை ஆரம்பித்துள்ளார்.
அதன் பின்னர், சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் உதவி செயலாளர், குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர், அபுதாபி தூதரகத்தில் துணைத் தூதுவர், இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தின் ஆலோசகர், கொழும்பு மேலதிக மாவட்ட செயலாளர், பாராளுமன்றத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர், கொழும்பு மாநகர சபையின் நகர செயலாளர், தெஹிவளை–கல்கிஸ்ஸை நகர சபையின் நகர ஆணையாளர், அரச வர்த்தக திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம், உரச் செயலகத்தின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்), முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
பதுளை மாவட்ட செயலாளராக பதவியேற்பதற்கு முன், அவர் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளராக (அபிவிருத்தி) கடமையாற்றியுள்ளார்.












