தொடர்ச்சியான அனர்த்தங்களுக்கு உள்ளாகும் மாவட்டமான ,பதுளை மாவட்டத்தில் அவசர அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுப்பதற்கும் மற்றும் ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தி, மீட்பு மற்றும் நிவாரண திறன்களை மேம்படுத்தி, உயிர்களை காக்கும் நோக்கில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ,பதுளை மாவட்ட செயலகமும் இணைந்து, மாவட்டத்திலுள்ள அனைத்து அரச அமைப்புகளின் பங்கேற்புடன், எல்ல நகர அருகாமையில் (16) இந்த முன்னெச்சரிக்கை ஒத்திகை நடத்தப்பட்டது.

இவ் ஒத்திகை நிகழ்வில் பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன, ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, எல்ல பிரதேச செயலாளர், பதுளை மாநகர சபை, 112 வது படையணி தலைமையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தியோகத்தர்கள், எலதலுவ இராணுவ முகாம், பதுளை பொலிஸ் நிலையம், பிரதேச சபை, 1990 தேசிய அவசர அம்பியுலன்ஸ் சேவை, பதுளை போதனா வைத்தியசாலை மற்றும் மீட்பு குழுக்களின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றது.

ga5555
ga111
ga2222
ga4444
ga3333